Home இலங்கை யாழில் நடைபெற்ற தேசிய நல்லிணக்க புத்தாண்டு பெருவிழா

யாழில் நடைபெற்ற தேசிய நல்லிணக்க புத்தாண்டு பெருவிழா

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


சமாதான புத்தாண்டு உதயம் – தேசிய நல்லிணக்க புத்தாண்டு பெருவிழா 2019 யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு இன்று காலை யாழ். துரையப்பா மைதானத்தில் நடைபெற்றது.

தேசிய நல்லிணக்க அமைச்சு மற்றும் யாழ். மாவட்ட செயலகம் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

புத்தாண்டை கொண்டாடும் வகையில் தமிழ், சிங்கள மக்களின் பண்பாடுகள், கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உணவுகள் பரிமாறப்பட்டதுடன், பண்பாட்டு நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் என்பன இதன்போது இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் தேசிய ஒருமைப்பாடு, சகவாழ்வு இராஜாங்க மற்றும் முஸ்லிம் விவகார இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் இந்திய துணை தூதுவர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More