Home இலங்கை வரகாபொலயில் வான் ஒன்றுடன் இருவர் கைது – 4 வோக்கி டோக்கிகள் மீட்பு…

வரகாபொலயில் வான் ஒன்றுடன் இருவர் கைது – 4 வோக்கி டோக்கிகள் மீட்பு…

by admin


வரகாபொல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான வான் ஒன்றுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறைப் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.  சந்தேகநபர்களுடன் சேர்த்து SG PH – 3779 என்ற வான் வரகாபொல காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.  அதேநேரம் இவர்களுடன் தொடர்பு வைத்திருந்த மேலும் ஒரு சந்தேகநபர் ஹெம்மாதகம   பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட வீட்டில் காவற்துறையினர், விசேட அதிரடி படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொழுது அங்கிருந்து மோட்டார் சைக்கிளொன்றும், 4 வோக்கி டோக்கிக கருவிகளும், 3 சார்ஜர்கள் என்பன கிடைக்கப்பெற்றதாகப் காவற்துறை ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More