Home இலங்கை இலங்கைத் தாக்குதல்கள் விசாரணைக்கு FBI – INTERPOL உதவி…

இலங்கைத் தாக்குதல்கள் விசாரணைக்கு FBI – INTERPOL உதவி…

by admin

கடந்த உயிர்த்த ஞாயிற்றுக் கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்காவின் எப்.பி.ஐ ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க சிறப்பு சர்வதேச காவற்துறைக் குழுவொன்று ஏற்கனவே இலங்கைக்கு வந்துள்ளது.

இலங்கையின் கோரிக்கைக்கு அமைய குற்றச்செயல் பரிசீலனை, வெடிப்புச் சம்பவங்கள், பயங்கரவாத ஒழிப்பு ஆகிய பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அடங்கிய சர்வதேச காவல்துறைகுழுவே இவ்வாறு இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக இன்டர்போல் செயலாளர் நாயகம் ஜேர்கன் ஸ்டொக் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தற்கொலை தாக்குதலுடனான சர்வதேச தொடர்புகள் குறித்து கண்டறிவதற்காக, தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அமைப்பு தொடர்பான ஆவணங்கள், அவர்களது பயண நகர்வுகளை ஆராயும் நடவடிக்கை தற்போதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இன்டர்போல் செயலாளர் நாயகம் ஜேர்கன் ஸ்டொக் சுட்டிக்காட்டினார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More