Home இலங்கை ஹேமசிறி பெர்னாண்டோ பதவி விலகியுள்ளார்

ஹேமசிறி பெர்னாண்டோ பதவி விலகியுள்ளார்

by admin


பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய ஹேமசிறி பெர்னாண்டோ பதவி விலகலுக்கான கடிதத்தினை கையளித்துள்ளார்.

இலங்கையில் உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் அறிவித்திருந்தும், இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவிக்காமை தொடர்பில்; காவல்துறை மா அதிபரையும், பாதுகாப்பு செயலாளரையும் பதவி விலகுமாறு எழுந்த அழுத்தங்களினாலேயே பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய ஹேமசிறி பெர்னாண்டோ தனது பதவிவிலகல் கடிதத்தை ஒப்படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 

#HemasiriFernando #resign #eastersundayLK #Defense Secretary

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More