Home இலங்கை மட்டக்களப்பு பாலமுனையில், தற்கொலைக் தாக்குதலுக்கான ஒத்திகை இடம்பெற்றது..

மட்டக்களப்பு பாலமுனையில், தற்கொலைக் தாக்குதலுக்கான ஒத்திகை இடம்பெற்றது..

by admin

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கான ஒத்திகை மட்டக்களப்பு பாலமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் 8 இடங்களில் தற்கொலைக் குண்டு தாக்குதல் இடம்பெற்றன. இந்தத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ் அமைப்பு உரிமைகோரியிருந்தது.

இந்நிலையில் குறித்த தற்கொலைத் தாக்குதலுக்கான ஒத்திகை, கடந்த 16 ஆம் திகதி, மட்டக்களப்பு பாலமுனைப் பகுதியில் உள்ள வெற்றுக் காணியில் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் ஓத்திகை இடம்பெற்ற காணியின் உரிமையாளர் கடந்த 18 ஆம் திகதி காத்தான்குடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த ஒத்திகைக்கு “டீயோ” ரக மோட்டார் சைக்கிள் ஒன்று பயன்டுத்தப்பட்டுள்ளமை காவற்துறையினரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. #batticaloapalamunai #Srilanka #eastersundayattacklk

 

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More