Home இலங்கை மட்டுக்களப்பு மத சார்பான தனியார் பல்கலைக்கழகத்தை, அரசின் கீழ் கொண்டுவரவேண்டும்!

மட்டுக்களப்பு மத சார்பான தனியார் பல்கலைக்கழகத்தை, அரசின் கீழ் கொண்டுவரவேண்டும்!

by admin


மதத்தை அடிப்படையாகக்கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ள மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும். அல்லது முழுமையாக அரசாங்கத்துக்கு கீழ் கொண்டுவரப்படவேண்டும் என பல்கலைக்கழக விரிவுரையாளர் மனோஞ் வீரசிங்க கோரியுள்ளார்.

அத்துடன் தற்போது மட்டக்களப்பில் இன அடிப்படையிலான பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதில் முஸ்லிம்களின் ஷரீஆ கல்வி பீடம் ஒன்று இருக்கின்றது. இதற்கான விரிவுரையாளர்கள் வெளிநாடுகளில் இருந்தே அழைத்துவரப்பட இருக்கின்றது.

ஆனால் இதில் ஷரீஆ பீடம் இல்லை என இந்த பல்கலைக்கழகத்தின் பொறுப்பாளராக இருக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவிக்கின்றார்.

ஆனால் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் அமையப்பெற்றிருக்கும் பீடங்கள் தொடர்பான பரிந்துரை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அதில் ஷரீஆ பீடமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆகவே மதத்தை அடிப்படையாகக்கொண்டு ஆரம்பிக்கப்படும் இந்த தனியார் பல்கலைக்கழகத்தை தடுத்து நிறுத்தவேண்டும். அல்லது முழுமையாக அரசாங்கத்துக்கு கீழ் கொண்டுவரப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். #batticaloa

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More