Home இலங்கை கிளிநொச்சியில் மூன்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 101 குடும்பங்களுக்கு நிரந்த வீடு

கிளிநொச்சியில் மூன்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 101 குடும்பங்களுக்கு நிரந்த வீடு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கோரக்கன்கட்டு, கல்மடுநகர், உரியான், பரந்தன் பகுதியில் உள்ள 63 குடும்பங்களுக்கும் கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்கு உட்ப்பட்ட செலவாநகர், அம்பாள்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 23 குடும்பங்களுக்கும், பச்சலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்கு உட்ப்பட்ட தம்பகாமம் கிராமத்தின் 15 குடும்பங்களுக்களுக்களுக்கு நிரந்த வீட்டுக்கான தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் (நாடுபூராகவும் 187 அடிக்கல் நாட்டுவோம் எனும் தொனிப்பொருளில்) இன்று (10.05.2019) அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று கிளிநாச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் உள்ள சிவபுரம் பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.

இன் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ,கண்டாவளை பிரதேச செயலாளர் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர் .மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்

#kilinochchi #permanenthouses #sritharan

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More