Home இலங்கை மீண்டும் சமூக ஊடகங்கள் முடக்கம்

மீண்டும் சமூக ஊடகங்கள் முடக்கம்

by admin
 .

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளையடுத்து மீண்டும் சமூக ஊடகங்களின் செயற்பாடுகள் தொலைத்தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வட்ஸ் அப், வைபர், முகப்புத்தகம், ஐ.எம்.ஒ., செனப்சற், இன்ஸ்டர்கிராம், யூடியூப் ஆகிய சமூக ஊடகங்களின் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சமூக ஊடகங்களின் முடக்கம் தற்காலிகமானதென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் முகப்புத்தகத்தில் பதிவேற்றப்பட்ட பின்னூட்டத்தால் சிலாபம் நகரில் கலவரம் ஏற்பட்டு அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முகப்புத்தகத்தில் பின்னூட்டம் செய்தவர் கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  #socialmedia #YouTube #facebook #whatsup

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More