Home இலங்கை கொக்குவில் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இளைஞர்களுக்கு விளக்கமறியல்

கொக்குவில் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இளைஞர்களுக்கு விளக்கமறியல்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடினார்கள் என்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள்; இருவர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொக்குவில் கேணியடியில் சந்தேகத்துக்கு இடமாக இருவர் நடமாடுவது தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு நேற்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினனர் இருவரையும் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

சந்தேகநபர்கள் இருவரும் ஓட்டுமடத்தில் வசிப்பதாகத் தெரிவித்த போதும் கொக்குவிலில் நடமாடியமைக்கான காரணத்தைத் தெரிவிக்காதமையினால் கைது செய்யப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

‘சந்தேகநபர்கள் ஓட்டுமடத்தில் வசிக்கின்ற போதும் கொக்குவில் பகுதியில் நடமாடியமைக்கான காரணத்தைக் கூறவில்லை. அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடவேண்டும்’ என்று காவல்துறையினர் மன்றுரைத்தனர்.

‘சந்தேகநபர்களை கொக்குவிலில் கைது செய்யவில்லை. அவர்களுடைய வீடுகளுக்குச் சென்றே காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை பிணையில் விடுவிக்கவேண்டும்’ என்று சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, மன்றில் விண்ணப்பம் செய்தார்.

இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல், சந்தேகநபர்களை வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.-

#கொக்குவில்  #சந்தேகத்துக்கு  #விளக்கமறியல் #kokuvi #jaffna

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More