Home உலகம் பிரேசிலில் துப்பாக்கிச்சூடு 11 பேர் பலி – பலர் காயம்

பிரேசிலில் துப்பாக்கிச்சூடு 11 பேர் பலி – பலர் காயம்

by admin


பிரேசிலில் மதுபானச்சாலை ஒன்றில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மதுபானச்சாலையில் நேற்று மாலை வாடிக்கையாளர்கள் பலர் மது அருந்திக்கொண்டிருந்த வேளை முகமூடி அணிந்தபடி 3 கார்களில் வந்த நபர்கள் அவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் 6 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துடன் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மதுபானச்சாலையில் போதைப் பொருட்கள் விற்பனையும் நடைபெறுவதனால் போதைப்பொருள் விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

#Brazil #bar  #shooting #பிரேசில்  #துப்பாக்கிச்சூடு #மதுபானச்சாலை

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More