கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக வவுனியாவில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.  மதவாதி, தேசதரோகி, ரிஷாத் பதியுதீனை, உடனடியாக பாராளுமன்றத்தில் இருந்து நீக்கவும் என்ற வாசகங்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் எழுதப்பட்டு வவுனியா மணிக்கூட்டு கோபுரம், தேக்கவத்தை, மூன்றுமுறிப்பு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. #ரிஷாத்பதியுதீன் #வவுனியா