Home இலங்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – உயர் நீதிமன்ற மனுக்கள் விசாரணைக்கு வருகின்றன..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – உயர் நீதிமன்ற மனுக்கள் விசாரணைக்கு வருகின்றன..

by admin

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சகல மனுக்களும் அடுத்த மாதம் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குறித்த மனுக்கள் ஐந்து நீதியரசர்கள் கொண்ட குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த மனுக்களை தேசிய முக்கியத்துவம் மிக்க மனுக்களாக கருத்திற்கொண்டு, அவற்றை நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு சட்ட மா அதிபர் முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் இதனை அறிவித்துள்ளது. #உயிர்த்தஞாயிறுதாக்குதல் #உயர்நீதிமன்றம் #சட்டமாஅதிபர்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More