Home இலங்கை தெரிவுக்குழு முன் முன்னிலையாகுமாறு அசாத் சாலிக்கு அழைப்பு

தெரிவுக்குழு முன் முன்னிலையாகுமாறு அசாத் சாலிக்கு அழைப்பு

by admin


உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக, நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்காக முன்னிலையாகுமாறு மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி அழைக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் விசாரணைக் குழுவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவர், அகில இலங்கை ஜமயத்துல் உலமா சபையின் பிரதிநிதி ஆகியோரும் இன்றையதினம் சாட்சிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை எவ்வித அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்களுக்கு அடிபணியாது தொடர்ந்து முன்னெடுக்குமாறு பிரதான சிவில் அமைப்புகளின் பிரதானிகள் சிலர் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

#தெரிவுக்குழு  #முன்னிலையாகுமாறு #அசாத் சாலி #உயிர்த்த ஞாயிறு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More