Home இலங்கை நாட்டில் பொது நீதி மற்றும் ஒரே கலாசாரம் அனைவருக்கும் பொதுவானது

நாட்டில் பொது நீதி மற்றும் ஒரே கலாசாரம் அனைவருக்கும் பொதுவானது

by admin


நாட்டில் பொது நீதி மற்றும் ஒரே கலாசாரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே இலங்கையில் இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் ஒற்றுமை பேணப்பட வேண்டும். இதற்கு முஸ்லிம் தலைவர்கள் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் என்று பதவி விலகிய முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களிடன்   அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்கள்  வலியுறுத்தியுள்ளனர்.

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் அஸ்கிரிய , மல்வத்து பீட மகாநாயக்க தேரர்கள் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று கண்டியில் இடம்பெற்றது. இதன்போதே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியமை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அதேவேளை மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தவும் முடியாது என்றும் கூறிய   மகாநாயக்க தேரர்கள்  பதவி விலகி பிரிந்து செல்வதால் தீர்வினைக்காண முடியாது என்பதால் முஸ்லிம் உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன்  மகாநாயக்க தேரர்கள் தொடர்ந்து கூறுகையில்,
குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளவர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நாட்டில் பொது நீதி மற்றும் ஒரே கலாசாரம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்றும் தெரிவித்தனர்.  அத்துடன் இலங்கையில் இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் ஒற்றுமை பேணப்பட வேண்டும். இதற்கு முஸ்லிம் தலைவர்கள் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் என்றும் இதன்போது  மகாநாயக்க தேரர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.
இதன்போது  முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாக பதவி விலகியமை குறித்து மகா நாயக்க தேரர்களுக்கு விளக்கமளித்துள்ளனர்.
# பொது நீதி #கலாசாரம் #பொதுவானது  #அஸ்கிரிய பீடம்  #முஸ்லீம்
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More