Home இலங்கை நீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்…

நீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்…

by admin

வெசாக் வழிபாடு பிள்ளையாருக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக மாறியது!

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் பௌத்த பிக்குகளும் தென்பகுதியிலிருந்து அழைத்துவரப்பட்ட சிங்கள மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். வெசாக் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட வழிபாடு இறுதியில் பிள்ளையாருக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

குறித்த பிள்ளையார் ஆலய வளவில் அடாத்தாக அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமஹா விகாரையின் பெயர் தாங்கிய பெயர் பலகை வீதி அபிவிருத்தி திணைக்களத்திடம் அனுமதி பெறப்படாது அமைக்கப்ட்டுள்ளதாக தெரிவித்து காவல்துறையினரும் வீதி அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து குறித்த பெயர் பலகையை கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அகற்றியிருந்தனர். இவ்வாறு பெயர்ப்பலகை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது .

ஆர்ப்பாட் டத்தில் கலந்துகொண்டவர்கள் மீண்டும் அகற்றப்பட்ட பெயர்ப்பலகை வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் நாட்டப்படவேண்டும் எனவும் அவ்வாறு நடத்தப்படாது விடத்து வரும் விளைவுகளுக்கு தாம் பொறுப்பில்லை எனவும் எத்தனையோ சட்டவிரோத பெயர்பலகைகள் இருக்கும் நிலையில் அவற்றை அகற்றாதவர்கள் விகாரையின் பெயர்பலகையை அகற்றியது தவறு எனவும் தெரிவித்தனர் .

மேலும் இங்கே பிள்ளையார் ஆலயம் எதுவும் இருக்கவில்லை எனவும் இது ஒரு புராதன பௌத்த ஆலயம் இது தமது ஆலயம் எனவும் சிங்கள மக்களின் உரிமைகளில் கைவைக்கவேண்டாம் எனவும் பௌத்த உரிமைகளை பறிக்கவேண்டாம் எனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

ஆலயப்பகுதியில் இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கமின்றி வழிபாடுகளை மேற்கொள்ளமுடியும் என முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்று கடந்த மே மாதம் 6ஆம் திகதி தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் இரண்டாவது தடவையாகவும் பௌத்த பிக்குகளால் தென்னிலங்கை மக்கள் அழைத்து வரப்பட்டு, அமைதியற்ற சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. #முல்லைத்தீவு #செம்மலை நீராவியடிபிள்ளையார் #வெசாக்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More