Home இலங்கை கொக்குவில் மஞ்சவனப்பதி பகுதி வீட்டில், வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசம்…

கொக்குவில் மஞ்சவனப்பதி பகுதி வீட்டில், வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசம்…

by admin


கொக்குவில் மஞ்சவனப்பதி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் பெற்றோல் குண்டை வீசியும் அங்கிருந்த பெறுமதி வாய்ந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் சென்ற கும்பல் ஒன்றே இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது என காவற்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தில் வீட்டிலிருந்த தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பெறுமதியான தளபாடங்கள் மற்றும் பொருள்கள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. எனினும் வீட்டிலிருந்தவர்கள் தாக்குதலிருந்து தப்பித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  இதேவேளை, கொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து ஆவா குழு உள்ளிட்ட வன்முறையாளர்களுடன் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின்றி எந்த இடத்திலும் பேச்சு நடத்த தான் தயார் என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கடந்த வெள்ளிக்கிழமை அழைப்புவிடுத்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது. #வாள்வெட்டுக்கும்பல் #கொக்குவில்மஞ்சவனப்பதி #ஆவாகுழு #சுரேன்ராகவன்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More