Home இலங்கை வீதி சீரமைப்பு பணிகளுக்காக பறிக்கப்பட்டிருந்த மண் திருட்டு

வீதி சீரமைப்பு பணிகளுக்காக பறிக்கப்பட்டிருந்த மண் திருட்டு

by admin
யாழில். வீதி சீரமைப்பு பணிகளுக்கு என வீதியில் பறிக்கப்பட்டிருந்த 3 டிப்பர் மண் ஒரே இரவில் திருடப்பட்டுள்ளது.  கிராம எழுச்சி திட்டத்தின் கீழ் யாழ்.மாநகர சபை எல்லைக்குள் வீதி சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதில் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள வீதி ஒன்றினை சீரமைக்கவென வீதியோரமாக 3 டிப்பர் மண் பறிக்கப்பட்டிருந்தது. அதனை இனம் தெரியாதவர்கள் ஒரே இரவில் திருடி சென்றுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட வாகனத்தினை அருகில் பொருத்தபட்டு இருந்த சிசிரிவி கமரா (CCTV) மூலம் அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
#யாழில்  #வீதி சீரமைப்பு  #மண் திருட்டு #சிசிரிவி
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More