Home இலங்கை கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்திற்கு ஆதரவாக திருமலையிலும் போராட்டம்!

கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்திற்கு ஆதரவாக திருமலையிலும் போராட்டம்!

by admin

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வலியுறுத்தி திருகோணமலையில் போராட்டம் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவே இப் போராட்டம் இடம்பெற்றது.

கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரிபெரும் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுத்து வரப்படுகின்ற நிலையில் மட்டக்களப்பில் முற்போக்கு தமிழர்கள் அமைப்பினரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆறாவது நாளாகப் போராட்டம் தொடர்கின்ற நிலையில், உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருப்பவர்களின் உடல் நிலை மோசமாகி வருவதாக வைத்தியர்கள் எச்சரித்திருந்தனர். நேற்றைய தினம் பிரதமரால் அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானத்திற்கும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் முகமாக திருகோணமலையிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, கல்முனை, திருகோணமலை என கிழக்கு மாகாணத்தில் இப் போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகின்றது. #அம்பாறை #கல்முனை# “தமிழ்ப்பிரதேசசெயலகம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More