Home உலகம் மடகஸ்கார் சுதந்திர தின கொண்டாட்டத்தில் சனநெரிசலில் சிக்கி 16 பேர் பலி

மடகஸ்கார் சுதந்திர தின கொண்டாட்டத்தில் சனநெரிசலில் சிக்கி 16 பேர் பலி

by admin


கிழக்கு ஆபிரிக்க நாடான மடகஸ்காரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 59-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது மைதானம் ஒன்றில் ஏற்பட்ட சுதந்திரதின கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மைதானத்தின் வாசல்கள் காவல்துறையினரால் மூடப்பட்டதன் பின்னர் அங்கிருந்து வெளியேற முற்பட்டபோதே இவ்வாறு சன நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிகழ்வுகள் முடிவடைந்ததும் பாதுகாப்பு அதிகாரிகளால் மைதான வாயில்கள் திறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதும், முன்னதாக வாயில்கள் மூடப்பட்டமையே உயிரிழப்பிற்கு காரணம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் இதே மைதானத்தில் இடம்பெற்ற கால்பந்தாட்டப் போட்டியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததோடு 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #மடகஸ்கார் #சுதந்திர தின , #சனநெரிசலில் #Madagascar

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More