Home இலங்கை மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவனுக்கு விளக்கமறியல்….

மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவனுக்கு விளக்கமறியல்….

by admin


குடும்ப தகராறு காணரமாக மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த குடும்பத்தலைவரை வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி. போல் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் குருநகர் சென்றொக் வாசிகசாலைக்கு அருகாமையில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தாயரான 47 வயதுடைய ஜே.யு. பொலினியா என்பவரே கணவரின் கத்திக் குத்துக்கு இலக்காகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. அவரது உடலில் கழுத்து உள்பட 12 இடங்களில் கத்திக் குத்து இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

முச்சக்கர வண்டிச் சாரதியான குடும்பத்தலைவரிடம் மனைவி தினமும் பணம் கேட்டும் வருமானம் குறித்துக் கேட்டும் தொல்லை தருவதாகவும் அதனால் ஏற்பட்ட முரண்பாடே கொலைக்குக் காரணமானது என காவற்துறை விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மனைவியைக் கத்தியால் சராமாரியாகக் குத்திவிட்டு ஜோச் எமிலியாம்பிள்ளை என்ற குடும்பத்தலைவர் தலைமறைவாகினார். எனினும் அவர் வியாழக்கிழமை மாலை யாழ்ப்பாணம் காவல் நிலையில் சரணடைந்திருந்தார்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை முற்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிவான், சந்தேகநபரை வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.  #விளக்கமறியல்  #யாழ்ப்பாணம் #குருநகர்  #கத்தியால்குத்திக்கொலை #யாழ்ப்பாணம்நீதிமன்றநீதிவான்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More