Home இலங்கை ஓலைத்தொடுவாய் – நடுக்குடா பகுதிகளிலிருந்து 1114 கிலோ பீடி சுற்றும் இலைகள் மீட்பு :

ஓலைத்தொடுவாய் – நடுக்குடா பகுதிகளிலிருந்து 1114 கிலோ பீடி சுற்றும் இலைகள் மீட்பு :

by admin

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் காட்டுப்பகுதி மற்றும் நடுக்குடா கடற்கரை பகுதியில் இருந்து ஒரு தொகுதி பீடி சுற்றும் இலைகளை கடற்படையினர் நேற்று சனிக்கிழமை (29) மீட்டுள்ளனர். நேற்று காலை ஓலைத் தொடுவாய் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 126.5 கிலோ கிராம் எடை கொண்ட பீடி சுற்றும் இலைகளை கடற்படையினர் கண்டு பிடித்தது மீட்டுள்ளனர்.

ஆத்துடன் மன்னார் நடுக் குடா கடற்கரை பகுதியிலும் நேற்று கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 988.4 கிலோ கிராம் பீடி சுற்றும் இலைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.நடுக்குடா கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 20 பொதிகளில் இருந்த பீடி இலைகளை கைவிடப்பட்ட நிலையில் கண்டு பிடித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. #ஓலைத்தொடுவாய்  #நடுக்குடா #பீடி #மீட்பு :

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More