Home இலங்கைஸ்கந்தவரோதயா கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழாவில் ரணில் விக்கிரமசிங்க….

ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழாவில் ரணில் விக்கிரமசிங்க….

by admin


யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு தின விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.

இன்று காலை பாடசாலைக்கு சென்ற பிரதமரை மங்கள வாத்தியங்கள் இசைக்க, பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வுகளுடன் பிரதான மண்டபத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் தமிழ் மொழியில் தேசிய கீதமும் பாடசாலை கீதமும் இசைக்கபட்டன.

அதனைத் தொடர்ந்து, 58 மில்லியன் ரூபாய் நிதியில், பாடசாலைக்கான கேட்போர் கூடத்திற்கான அடிக்கல்லினை நாட்டிய பிரதமர் பெயர்ப்பலகையும் திரை நீக்கமும் செய்து வைத்தார். இந்த நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.சரவணபவன், மாவை சேனாதிராஜா, ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More