Home உலகம் பாகிஸ்தான் இந்தியாவுக்கான வான்வழி பயணத்தை திறந்துள்ளது

பாகிஸ்தான் இந்தியாவுக்கான வான்வழி பயணத்தை திறந்துள்ளது

by admin

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வழியாக பறக்கும் வகையில் பாகிஸ்தான் தனது வான்வழியை திறந்துள்ளது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பெப்ரவரி மாதம் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாலக்கோட் தாக்குதல் நடத்தியிருந்தது.இதையடுத்து இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக தனது வான்வழியை இந்திய விமானங்கள் பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் வான்வழியை திறந்து விடுவது தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையில் இரு நாடுகளுக்குமிடையே உடன்பாடு ஏற்பட்டிருந்த நிலையில் , தனது வான்வழியையும் இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் திறந்துவிட்டுள்ளது.

இதனையடுத்து இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியில் விரைவில் பறக்கத்தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  #பாகிஸ்தான்  #இந்தியா #வான்வழி #விமானப்படை

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More