Home இலங்கையாழ் இந்துக்கல்லூரியில் சிறப்பாக நடை பெற்ற ஆடிப் பிறப்பு நிகழ்வு

யாழ் இந்துக்கல்லூரியில் சிறப்பாக நடை பெற்ற ஆடிப் பிறப்பு நிகழ்வு

by admin

 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர்களினால் ஆடித்திருநாள் நிகழ்வு மிகச் சிறப்பாக கொண் டாடப்பட்டது கல்லூரி அதிபரின் வழிகாட்டுதலில் குழுச் சாரணியப் பொறுப்பாசிரியர் திரு.க.சுவாமிநாதனின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.

நிகழ்வுகள் காலையில் பிரார்தனைமண்டபத்தில் தேவாரத்துடன் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து திரு.க.சுவாமிநாதன் ஆசிரியரினால் ஆடிப் பிறப்பு கொண்டாடப்படுவதன் முக்கியத்துவத்தினை ஆரோக்கிய வாழ்வின் அடிப்படை கருத்துக்கள் இந்து மதத்தில் பொதிந்து உள்ளது என சமய திருநாட்களை உதாரணத்துடன் எடுத்து இயம்பினார் அதனைத் தொடர்ந்து மாணவர்களினால் நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் ஆடிப் பிறப்புக் கு நாளை விடுதலை….. என்ற பாடலை பாடி மகிழ்ந்தனர்.

பிற்பகல் கல்லூரியில் சாரணர்களினால் ஆடிக்கூழ் , கொழுக்கட்டை என்பன சமைக்கப்பட்டு பாடசாலை சமூகத்தினர் அனைவருக்கும் பரிமாறி நிகழ்வினை சிறப்பாக கொண்டாடினர். யாழ் இந்துக்கல்லூரியில் சிறப்பாக நடை பெற்ற ஆடிப் பிறப்பு நிகழ்வு #யாழ் இந்துக்கல்லூரி  #ஆடிப் பிறப்பு  #ஆரோக்கிய

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More