Home இலங்கை கப் ரக வாகனம் – முச்சக்கரவண்டி விபத்து – ஒருவர் பலத்த காயம்

கப் ரக வாகனம் – முச்சக்கரவண்டி விபத்து – ஒருவர் பலத்த காயம்

by admin

திம்புள்ள பத்தனை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட திம்புள்ள பகுதியில் நேற்று (20.07.2019 ) மாலை 6.30 மணியளவில் கப் ரக வாகனம் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் கடும்காயங்களுக்குள்ளான முச்சக்கரவண்டி சாரதி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தலவாக்கலை – நாவலப்பிட்டி பீ-406 பிரதான வீதியில் தலவாக்கலை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி பகுதியை நோக்கிச் சென்ற கப் ரக வாகனம் ஒன்றும் போகாவத்தையிலிருந்து பத்தனை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியும் திம்புள்ள பகுதியில் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கப் ரக வாகனம் குறித்த முச்சக்கரவண்டியை மோதி விட்டு நிறுத்தாமல் சென்றதாகவும், பின்னர் பிரதேசவாசிகள் அவரை துரத்திப் பிடிக்க முற்பட்ட போது, குறித்த கப் ரக வாகனத்தின் சாரதி நாவலப்பிட்டி காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவரின் வாக்குமூலத்தை எழுதிக்கொண்ட நாவலப்பிட்டி காவல்துறையினர் மேற்படி சாரதியை திம்புள்ள பத்தனை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். #வாகனம்  #முச்சக்கரவண்டி #விபத்து #காயம்
(க.கிஷாந்தன்)

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More