Home இந்தியா நளினி செவ்வாய்க்கிழமை பரோலில் வெளியே வரலாம்

நளினி செவ்வாய்க்கிழமை பரோலில் வெளியே வரலாம்

by admin


ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரில் ஒருவரான நளினி செவ்வாய்க்கிழமை பரோலில் வெளியே வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மகள் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நளினி ஆறு மாதம் பரோல் கேட்டிருந்த போதும் அவருக்கு ஒரு மாதம் மட்டுமே வழங்கப்பட்டது.

மத்திய சிறையில் இருந்து வெளியே வரும் அவர் ; உறவினர்களுடன் தங்குவதற்காக வேலூரில் வீடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் இந்த நாட்களில் இவர் அங்கு மட்டுமே தங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 ஆண்டு சிறை வாழ்க்கையில் அதிக நாட்கள் நளினி பரோலில் வெளியே வருவது இது முதல் முறையாகும்.
இறுதியாக நளினி தன்னுடைய தகப்பனாரது இறுதிச் சடங்கிற்காக 12 மணிநேரம் பரோலில் 2016 ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #நளினி   #பரோலில்  #ராஜிவ் காந்தி

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More