Home இந்தியா கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்தது.

கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்தது.

by admin

கர்நாடக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிர்ப்பாக 105 வாக்குகளும் பெற்றதால் ஆட்சி கவிழந்தது. 119 சட்டமன்ற உறுப்பினர்களின்; ஆதரவுடன் ஆட்சி செய்து வந்த முதலமைச்சர் குமாரசாமியை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 சட்டமன்ற உறுப்பினர்களும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்க்களும் பதவி விலகியிருந்தனர்.

அத்துடன் 2 சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களும் குமாரசாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு பாரதிய ஜனதா ஆதரவாளர்களாக மாறி உள்ளதுடன் மேலும் 2 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் பதவிவிலகிவி;ட்டனர்.  இதனால் தனது பெரும்பான்மையை குமாரசாமி இழந்துள்ள நிலையில் கர்நாடகாவில் 107 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. புதிய ஆட்சி அமைக்க முயன்று வருகிறது.

இந்’தநிலையில் சட்டசபையில் தனக்கு இருக்கும் பெரும்பான்மையi நிரூபித்துக் காட்டுவேன் என சவால் விட்ட முதலமைச்சர் குமாரசாமி அதற்கான தீர்மானத்தை கடந்த 18-ம் திகதி சட்டசபையில் தாக்கல் செய்தார்.
அந்த தீர்மானத்தின் மீது தொடர்ந்து விவாதம் நடைபெற்ற நிலையில் நேற்று மாலை இந்த விவாதத்தை முடித்துக் கொண்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் ரமேஷ்குமார் திட்டமிட்டார்.

இதையடுத்து நடைபெற்ற நம்பிக்கை குரல் வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குககளும் எதிராக 105 வாக்குகள் பதிவாகியதனையடுத்து அவரது ஆட்சி கவிழ்ந்துள்ளது #கர்நாடகா #ஆட்சி #கவிழ்ந்தது #குமாரசாமி #,பா.ஜ.க

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More