Home இலங்கை கொல்லூர் மூகாம்பிகையிடம், ரணில் + மைத்திரி பூரண கும்ப மரியாதை பெற்றனர்…

கொல்லூர் மூகாம்பிகையிடம், ரணில் + மைத்திரி பூரண கும்ப மரியாதை பெற்றனர்…

by admin

கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை ஆலையத்தில்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது துணைவியார் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர் வழிபாடுகளில் ஈடுபட்டனர். ரணில் விக்ரமசிங்கவும் அவரது பாரியார் மைத்ரி விக்ரமசிங்கவும்   இரண்டு நாட்கள் ஆன்மீகப் பயணமாக இந்தியா சென்றுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் அவருடைய பாரியாருடன் கர்நாடக மாநிலத்தில் பிரசித்திபெற்ற கொல்லூரு மூகாம்பிகை அம்மன்ஆலையத்தில்   நேற்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதனையொட்டி, பக்தர்களுக்கு கோயிலுக்குள் செல்ல காலை முதல் பிற்பகல் வரை தடை விதிக்கப்பட்டிருந்தது.

உடுப்பி மாவட்ட ஆட்சியர் ஹெப்சிபாராணி கொரல்பட்டி மற்றும் உடுப்பி மாவட்ட காவற்துறை  கண்காணிப்பாளர் நிஷா ஜேம்ஸ் மற்றும் ஆலையத நிர்வாகம் சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. இவர்கள், இன்று கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்திலுள்ள கோயிலில் தரிசனம் முடித்துக்கொண்டு, மாலை இலங்கைக்குத் திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More