Home இலங்கை தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க ரணிலுக்கும் ருவானுக்கும் அழைப்பு…

தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க ரணிலுக்கும் ருவானுக்கும் அழைப்பு…

by admin


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் அடுத்ததாக சாட்சியம் வழங்க பிரதமர் ரணில் விக்ரம சிங்கவிற்கும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தனவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆறாம் திகதி தெரிவுக் குழு அமர்வின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற தெரிவுக்குழு தெரிவித் துள்ளது.

எதிர்வரும் 6 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ள தெரிவுக்குழு விசாரணைகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன, அமைச்சர்களான சாகல ரத்நாயக மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார்.

எதிர்வரும் 6 ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் அமர்வுகளுடன் பிரதான விசாரணைகள் அனைத்துமே முடிவுக்கு வருவதுடன் அடுத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்படும் எனவும் இந்த மாதம் நடுப்பகுதியில் தெரிவுக்குழு விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவருவதுடன் எதிர்வரும் 23 ஆம் திகதி அறிக்கையை சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More