Home இலங்கை கோதுமை மா ஏற்றிச் சென்ற பாரவூர்தி விபத்து – ஐவர் பலத்த காயம்

கோதுமை மா ஏற்றிச் சென்ற பாரவூர்தி விபத்து – ஐவர் பலத்த காயம்

by admin

தலவாக்கலை பகுதியிலிருந்து டயகம பகுதிக்கு கோதுமை மா 800ற்கும் மேற்பட்ட பைகளை ஏற்றிச்சென்ற கனரக பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஐந்து பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலவாக்கலை – டயகம பிரதான வீதியில் நாகசேனை பகுதியில் வைத்து, குறித்த பாரவூர்தி வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (05.08.2019 ) காலை 9 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக லிந்துலை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர். எதிரே வந்த வாகனம் ஒன்றிற்கு இடமளிக்கும் போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

பாரவூர்தியில்; சாரதியும், உதவியாளர் உட்பட 5 பயணித்துள்ளதாகவும், ஐவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  #கோதுமை  #பாரவூர்தி #விபத்து #காயம்
(க.கிஷாந்தன்)

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More