Home இலங்கை காஷ்மீர் தந்த பாடத்தின் அடிப்படையிலேயே தமிழருக்கான அரசியல் தீர்வு குறித்து சிந்திக்க முடியும்…

காஷ்மீர் தந்த பாடத்தின் அடிப்படையிலேயே தமிழருக்கான அரசியல் தீர்வு குறித்து சிந்திக்க முடியும்…

by admin


இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் நடந்திருப்பவற்றைக் கவனத்திற்கொண்டே இலங்கையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது என முன்னாள் ஜனாதிபதியும் எதிர்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டிருக்கிறார். தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கத்திற்கான சாத்தியப்பாடு குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அவர், நீண்டகாலமாகத் தீர்வு காணப்படாமல் இருக்கும் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,  ‘பலவகையான அபிப்பிராயங்கள் தற்போது நிலவுகின்றன.

சிலர் புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரப்பட வேண்டுமென்று விரும்புகின்றனர்.

வேறு சிலர் சமஷ்டி அடிப்படையிலான ஏற்பாடு ஒன்று வேண்டுமென விரும்புகின்றார்கள்.

அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான அரசியல் தீர்வே போதுமானது என்று இன்னும் சிலர் கூறுகின்றார்கள்.

ஆனால் காணப்படக்கூடிய எந்தவொரு தீர்வும் நாட்டைப் பிளவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. காஷ்மீரில் நடந்திருப்பவற்றைப் மனதிற்கொண்டே நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவையிருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் ஜம்மு – காஷ்மீரின் விசேட அந்தஸ்த்தை இரத்துச் செய்த பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் செயலுக்குப் பின் அதுகுறித்து அரசியல் ரீதியில் தற்போது கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More