Home இலங்கை மயி­லிட்­டித் துறை­மு­கம் திறக்கப்படுகிறது – “மீள் குடயமர்வு தொடர்பில் ரணிலிடம் இடித்துரைப்பேன்” – மாவை…

மயி­லிட்­டித் துறை­மு­கம் திறக்கப்படுகிறது – “மீள் குடயமர்வு தொடர்பில் ரணிலிடம் இடித்துரைப்பேன்” – மாவை…

by admin

யாழ்ப்­பா­ணத்­தில் மக்­கள் மீள்­கு­டி­யேற்­றப்­ப­டா­துள்ள மயி­லிட்டி இறங்­கு­து­றையை அண்­டிய பகு­தி­யில் பெரும் நிதிச் செல­வில் சீர­மைக்­கப் பட்ட மயி­லிட்­டித் துறை­மு­கத்தை ரணில் விக்கிரமசிங்க  நாளை திறந்து வைக்­க­வுள்­ளார்.

போருக்கு முன்­னர் இலங்கை மீன்­பிடி உற்­பத்­தி­யில் மயி­லிட்­டித் துறை­மு­கம் 30 வீதத்துக்கு மேல் பங்­க­ளிப்புசெய்­தி­ருந்­தது. துறை­மு­கத்தை அண்­டி­யுள்ள மீன­வர்­களே அந்­தப் பங்­க­ளிப்­புக்கு கார­ண­மாக இருந்­த­னர்.

போர் கார­ண­மாக அங்­குள்ள மீன­வர்­கள் இடம்­பெ­யர்ந்­த­னர். துறை­மு­க­மும் அழி­வ­டைந்­தது. இரா­ணு­வத்­தின் முழுக் கட்­டுப்­பாட்­டில் மயி­லிட்டி கொண்­டு­வ­ரப்­பட்­டது. போருக்­குப் பின்­னர் அந்­தப் பகு­தி­யில் சிறி­ய­ளவு நிலங்­கள் விடு­விக்­கப்­பட்­டா­லும், துறை­மு­கத்தை அண்­டிய பகுதி தொடர்ந்­தும் இரா­ணு­வக் கட்­டுப்­பாட்­டி­லேயே உள்­ளது.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் துறை­மு­கத்­துக்­கான அபி­வி­ருத்­திப் பணி­கள் ஆரம்­பிப்­ப­தற்கு ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வால் துரித அபி­வி­ருத்­தித் திட்­டத்­தில் அடிக்­கல் நடப்­பட்­டது. அந்த நிகழ்­வில் உரை­யாற்றி கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை சோ.சேனா­தி­ராஜா மயி­லிட்­டித் துறை­மு­கத்தை அபி­வி­ருத்தி செய்­யும் அதே­வேளை இங்­கி­ருந்து இடம்பெயர்ந்து  வாழும் மக்­கள் மீண்­டும் இங்கு குடி­ய­மர்த்­தப்­ப­ட­வேண்­டும். அதற்கு அரசு வழி­வ­குக்­க­வேண்­டும் என்று கோரி­யி­ருந்­தார்.

இடம்­பெ­யர்ந்த மக்­கள் தொடர்­பா­கக் கடந்த ஒரு வருட கால­மாக அரசு கரி­சனை கொண்­டி­ருக்­க­வில்லை. அவர்­களை மீள்­கு­டி­ய­மர்த்­து­வ­தற்­கும் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.

அண்­மை­யில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை சோ.சேனா­தி­ராஜா தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வைச் சந்­தித்த போதும், அந்­தப் பகுதி மக்­க­ளின் மீள்­கு­டி­ய­மர்வு தொடர்­பில் பேசியிருந்தார். படைத் தரப்­பு­டன் பேசி நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று ரணில் தெரி­வித்­தார் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கூறி­யி­ருந்­தார்.

தற்­போது மயி­லிட்­டித் துறை­மு­கத்­தின் சீர­மைப்­புப் பணி­கள் நிறை­வ­டைந்­துள்­ளன. நாளை துறை­மு­கம் திறக்­கப்­ப­ட­வுள்­ளது. ஆனால் மக்­க­ளு­டைய மீள்­கு­டி­ய­மர்வு தொடர்­பில் தொடர்ந்­தும் ரணில் அரசு மௌன­மா­கவே உள்­ளது. இந்த விட­யம் தொடர்­பில் நாளைய திறப்பு விழா­வி­லும் ரணி­லி­டம் இடித்­து­ரைப்­பேன் என நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலைவருமான  மாவை  சேனா­தி­ராஜா  தெரி­வித்­துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More