Home இலங்கை கோத்தாபயவிடம் இருந்து பொன்சேக்காவுக்கு தொலைப்பேசி அழைப்பு?

கோத்தாபயவிடம் இருந்து பொன்சேக்காவுக்கு தொலைப்பேசி அழைப்பு?

by admin


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸவுடன் இணைந்து செயற்பட தேவையான பின்புலத்தை உருவாக்கும் நோக்கில் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா முயற்சித்து வருவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் களனி பிரதேச சபை உறுப்பினர் மனோஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், அண்மையில் கோத்தாபயவிடம் இருந்து சரத் பொன்சேக்காவுக்கு தொலைப்பேசி அழைப்பு சென்றதாகவும் அவர் கூறினார்.

அந்த தொலைப்பேசி அழைப்பில் பழைய கோபத்தை விட்டு தம்முடன் இணைந்து பயணிக்க முன் வருமாறு கோத்தாபய அழைப்பு விடுத்தாகவும், எனினும் அந்த அழைப்பை பொன்சேக்கா நிராகரிக்கவில்லை எனவும் மனோஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More