Home உலகம் ஜப்பானை தாக்கிய குரோசா புயல் – 6 லட்சம் பேர் வெளியேற்றம்…

ஜப்பானை தாக்கிய குரோசா புயல் – 6 லட்சம் பேர் வெளியேற்றம்…

by admin


ஜப்பானை குரோசா புயல் தாக்கியதை தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதனால் சுமார் 6 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர் ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஹோன்சு தீவில் உள்ள குரோ நகரில் நேற்று சக்திவாய்ந்த புயல் தாக்கியது. குரோசா எனர் பெயரிடப்பட்ட இந்த புயலினால் மணிக்கு 144 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதுடன் இடைவிடாத மழையும் பெய்தது. இதனால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துடன் மின் கம்பங்கள் சரிந்தன. வீட்டின் மேற்கூரைகளும் தூக்கி வீசப்பட்டன.  இடைவிடாது பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன் பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. புயல், மழை காரணமாக ஹிரோஷிமா மற்றும் அதனை சுற்றி உள்ள நகரங்களில் சுமார் 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்ததநிலையில் புயல் கரையை கடக்கும்போது, பலத்த காற்றுடன் ஒரேநாளில் மட்டும் சுமார், 1000 மில்லி மீற்றர் அளவுக்கு மழை பெய்யலாம் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதனையடுத்து நீர் நிலைகள் அருகே வசிக்கும் சுமார் 6 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். புயல், மழை காரணமாக இதுரை 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு லட்சக்கணக் கான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More