Home உலகம் தென் கொரியாவுடனான இனி பேச்சுவார்த்தை இல்லை…

தென் கொரியாவுடனான இனி பேச்சுவார்த்தை இல்லை…

by admin

தென் கொரியாவுடனான இனி பேச்சுவார்த்தை இல்லை என்று வட கொரியா அறிவித்துள்ளது. தென் கொரியாவின் முற்றிலும் தவறான நடவடிக்கைகளே இவ்வாறு இருநாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முறிவுக்கு காரணம் என வட கொரியா தெரிவித்துள்ளது. தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் நேற்று வியாழக்கிழமை ஆற்றிய உரைக்கு அளித்துள்ள பதில் அறிக்கையில்தான் இதுகுறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வட கொரியா தனது இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆறாவது பரிசோதனையாக இது கருதப்படுகிறது.

கொரிய பிராந்தியத்தில் அணு ஆயுதமற்ற நிலையை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங்-உன் இடையே கடந்த ஜூன் மாதம் நடந்த சந்திப்பில் உடன்பாடு எட்டப்பட்டிருந்த நிலையில், இந்த தொடர் ஏவுகணை பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More