Home இலங்கை மாதம்பிட்டி கொலை தொடர்பில் வாள்களுடன் மூவர் கைது…

மாதம்பிட்டி கொலை தொடர்பில் வாள்களுடன் மூவர் கைது…

by admin


கொழும்பு கிரான்பாஸ், மாதம்பிட்டி மயானத்திற்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 வாள்களுடன் 3 சந்தேகநபர்கள் மட்டக்குளி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறை விசேட அதிரடிப் படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கிரான்பாஸ், மாதம்பிட்டி மாயனத்திற்கு அருகில் நேற்று (15.08.19) பிற்பகல் 4.15 மணி அளவில் இந்த இரட்டைக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியில் சென்ற நான்கு பேர், மயானத்தில் இடம்பெற்ற இறுதிக் கிரியையில் கலந்து கொண்டிருந்த இருவரை மன்னா கத்தியால் தாக்கி கொலை செய்திருந்தனர்.
தாக்குதலில் பின்னர் குறித்த சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் தப்பிச் சென்றுள்ளனர்.  தாக்குதலில் உயிரிழந்த நபர்களில், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ´ஆனமாலு ரங்கஎன்ற நபரும் அடங்குவதாக இனங்காணப்பட்டுள்ளது.

இரு பாதாள உலக குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் முடிவாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்க கூடும் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.  எவ்வாறாயினும், மயானத்தில் விட்டுச் செல்லப்பட்ட முச்சக்கரவண்டி ´குடு ரொஷானின்´ மனைவிக்கு சொந்தமானது என உறுதியாகியுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும், காவற்துறை அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More