Home உலகம் ஏமனில் சிறைச்சாலை மீது தாக்குதல் 100க்கும் மேற்பட்டோர் பலி

ஏமனில் சிறைச்சாலை மீது தாக்குதல் 100க்கும் மேற்பட்டோர் பலி

by admin


ஏமன் நாட்டில் ஹவுத்தி போராளிகளின் சிறைச்சாலை மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச குழு தெரிவித்துள்ளது.

ஏமனின் தாமர் நகரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காயமடைந்த 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இரவு நேரத்தின் போது, ஆறு வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட சத்தம் கேட்டதாக உள்ளூர்மக்கள் தெரிவித்துள்ளனர்

அதேவேளை ஏமன் அரசபடைக்கு ஆதரவாக செயல்படும் சவூதி தலைமையிலான கூட்டுப்படை தாங்கள் நடத்திய தாக்குதலில், ஒரு ட்ரோன் மற்றும் ஏவுகணை தளம் அழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.  #ஏமன் #சிறைச்சாலை #தாக்குதல் #பலி #ஹவுத்தி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More