Home இந்தியா நளினியின் பரோலை நீடிக்க மறுப்பு

நளினியின் பரோலை நீடிக்க மறுப்பு

by admin

தனது பரோல் காலத்தை மேலும் நீடிக்கக்கோரி நளினி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த நளினி (வயது 52), தன் மகளின் திருமணத்திற்காக ஒரு மாத கால பரோலில் வெளியில் வந்துள்ளார்.  கடந்த ஜூலை மாதம் 25-ம் திகதி பரோலில் வந்த அவர், சத்துவாச்சாரியில் தங்கி தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

தன் மகள் ஹரித்ரா தமிழகம் வருவதில் தாமதம் ஏற்படுவதால், பரோல் காலத்தை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்திருந்ததனையடுத்து மனுவை பரிசீலித்த நீதிமன்றம், நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் வழங்கியிருந்தது

இந்நிலையில், தனது பரோலை ஒக்டோபர் 15-ம் திகதி வரை நீடிக்கக் கோரி நளினி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள், நளினிக்கு பரோல் காலத்தை நீடிக்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

இலங்கையில் இருக்கும் தனது மாமியார் வருவதற்கு தாமதம் ஆவதால், தனது பரோல் காலத்தை நீட்டிக்கும்படி நளினி கூறியதை நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது  #நளினி  #பரோல் #மறுப்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More