Home இலங்கை குடும்பத் தகராறு கோடாரியால் இளைஞர் அடித்துக் கொலை…

குடும்பத் தகராறு கோடாரியால் இளைஞர் அடித்துக் கொலை…

by admin

குடும்பத் தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என யாழ்ப்பாணம்  காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், அரியாலை – மணியம் தோட்டம் பகுதியில் இந்தச் சம்பவம் இன்று (15.10.19) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மணியந்தோட்டம் 5ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 33 வயதுடைய கொன்ஸ்ரன் கலஸ்ரன் என்பவரே கொலை செய்யட்டுள்ளார்.

மணியந்தோட்டம் 3ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த உறவினரே (மச்சான்) கொலை செய்தார் என விசாரணைகளில் தெரியவந்ததாக காவற்துறையினர்  குறிப்பிட்டுள்ளனர்.

“கொழும்புத்துறை பகுதியில் உள்ள நபர் ஒருவருக்கும், உயிரிழந்தவருக்கும் இடையில் நீண்டகாலமாக மோதல் நிலை இருந்தது. இன்றும் வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பாக மாறியது.

அந்த நபர் கோடரியால் இளைஞரின் தலையில் அடித்துள்ளார். தலையில் பலமாக அடிபட்டதால், சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்துள்ளார்” என்றும் காவற்துறையினர்  குறிப்பிட்டனர்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிண அறையில் வைக்கப்பட்டுள்ளது. கொலைச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவற்துறையினர்  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More