Home இலங்கை கல்லுண்டாய் வெளியில் பிரதமருடன் TNAயின் முக்கியஸ்த்தர்கள்..

கல்லுண்டாய் வெளியில் பிரதமருடன் TNAயின் முக்கியஸ்த்தர்கள்..

by admin

யாழ்ப்பாணத்துக்கு இன்று புதன்கிழமை வருகைதந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கல்லுண்டாய் வெளியில் புதிதாக அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை பார்வையிட்டார். அந்நிகழ்வில் பிரதமருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அணியும் கலந்துகொண்டது. அதன் போது, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் ஒளிப்படங்கள் பொறிக்கப்பட்ட துண்டறிக்கைகளும் விநியோகிக்கப்பட்டன

கல்லுண்டாய் வெளியில் மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 80 வீடுகள் அமைக்கப்பட்டன. அந்த வீட்டுத்திட்டத்தினை பார்வையிடுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று அங்கு சென்றிருந்தார்.

அங்கு சென்ற பிரதமருடன், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சோ. சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தாத்தன், சிவஞானம் சிறிதரன், ஈ.சரவணபவன், சிவமோகன், வடமாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனல்ட் உள்ளிட்டவர்களும் சென்றிருந்தனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More