Home உலகம் இங்கிலாந்தில் கொள்கலன் பாரவூர்தியிலிருந்து 39 சடலங்கள் மீட்பு

இங்கிலாந்தில் கொள்கலன் பாரவூர்தியிலிருந்து 39 சடலங்கள் மீட்பு

by admin


இங்கிலாந்தில் உள்ள எஸ்ஸெக்ஸ் கவுண்டியில் ஒரு கொள்கலன் பாரவூர்தியில் இருந்து 39 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இறந்தவர்களில் 38 பேர் பெரியவர்கள் எனவும் ஒருவர் பதின்ம வயதைச் சேர்ந்தவர் எனவும் ஆரம்ப கட்டடத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த வாகனத்தின் சாரதி கொலை செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். 25 வயதாகும் அந்த நபர் வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்தவர். பல்கேரியாவில் இருந்து வந்த இந்த வாகனம் ஹோலிஹெட் எனும் இடத்தின் வழியாக இங்கிலாந்துக்குள் நுழைந்ததாக எஸ்ஸெக்ஸ் காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 1.40 மணிக்கு ஈஸ்டர்ன் அவென்யூ எனும் இடத்தில் உள்ள வாட்டர் கிலேட் தொழிற் பூங்காவில் இந்த இறந்த உடல்கள் அடங்கிய கொள்கலன் பாரவூர்தி கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது அந்த இடம் காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் அந்த தொழிற் பூங்காவுக்குள் தொழிலாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல ஜூன் 2000ல், சீனக் குடியேறிகள் 58 பேர் மூச்சுத் திணறி இறந்த நிலையில் டோவர் எனும் இடத்தில் கொள்கலன் பாரவூர்தி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டிருந்தனர்

கொலைக் குற்றத்தில் ஈடுபட்டதாக அந்த வாகனத்தின் சாரதியான நெதர்லாந்து பிரஜை சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது  #இங்கிலாந்தில் #சடலங்கள் #மீட்பு
மூலம் பிபிசி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More