Home இலங்கை சுதந்திரபுரத்தில் மனித எச்சங்கள் மீட்கும் நடவடிக்கை

சுதந்திரபுரத்தில் மனித எச்சங்கள் மீட்கும் நடவடிக்கை

by admin


முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட சுதந்திரபுரம் கிராம பகுதியில் கடந்த 20 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டிருந்த மனித எச்சங்கள் முல்லைத்தீவு நீதிமன்றின் அனுமதியுடன் நீதவான் முன்னிலையில் மீட்கும் நடவடிக்கைகள் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 20ம் திகதி சுதந்திரபுரம் கிராம பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் ஒருபகுதி மண்ணை எடுத்து மறுபகுதியில் கொட்டியபோது மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டதனையடுத்து அப்பகுதிக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் நேற்றையதினம் மனித எச்சங்கள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார், சட்டமருத்துவ அதிகாரி றெகான்கேரத்,சட்ட வைத்திய நிபுணர் இளங்கோவன், காணாமல் போனோர் அலுவலக ஆணையாளர்கள் மிராட்றஹீம், க.வேந்தன்,பிரதீபா புண்ணியமூர்த்தி மற்றும் தடயவியல் காவல்துறையினர் முன்னிலையில் மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

முதல் கட்டமாக மேல் வெளிப்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் மேலும் குறித்த பகுதியில் அகழ்வு பணிகளை முன்னெடுப்பது குறித்து நீதிமன்றின் கட்டளையின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக சட்ட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார். #முல்லைத்தீவு #சுதந்திரபுரம்  #மனிதஎச்சங்கள் #மீட்கும்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More