Home இலங்கை ‘ஜனநாயக தேசிய முன்னணி’ க்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் சந்திரிக்கா…

‘ஜனநாயக தேசிய முன்னணி’ க்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் சந்திரிக்கா…

by admin


ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ´ஜனநாயக தேசிய முன்னணி´ அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு  ஆரம்பமாகியுள்ளது.  இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட 12 முன்னணி கட்சிகள் கொழும்பில் ஒன்றிணைந்துள்ளன. சிவில் அமைப்பு ஒன்றும் இன்றைய தினம் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் இந்த சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டுள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாற்று குழுவாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட தரப்பினர் இந்த முன்னணியுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More