Home இலங்கை ஆபத்தான மருந்துவக் கழிவுகள் எரியூட்டப்பட்டமை தொடர்பாக விசாரணை…

ஆபத்தான மருந்துவக் கழிவுகள் எரியூட்டப்பட்டமை தொடர்பாக விசாரணை…

by admin

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் வளாகமான சுகாதாரக் கிராமத்தில் பெரும் குழி அமைக்கப்பட்டு அதனுள் ஆபத்தான மருந்துவக் கழிவுகள் எரியூட்டப்பட்டமை தொடர்பான முறைப்பாட்டை விசாரித்து விளக்கமளிக்குமாறு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு மாகாண பிரதம செயளாலர் அ.பத்திநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் வளாகத்தில் இரகசியமான முறையில் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் எனத் தெரிந்துகொண்டே மருத்துவக் கழிவுகள் எரியூட்டப்பட்டது என்று அந்தப் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். தாம் வாழ்வதற்கான பாதுகாப்பை வழங்கக் கோரி மக்கள் கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் நேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போது, சுகாதாரக் கிராமத்தில் அமைக்கப்பட்ட குழியினுள் பல ஆயிரம் மருத்து டப்பாக்கள் திறக்கப்படாத நிலையில் அரைகுறையாக எரிந்த நிலையில் காணப்பட்டன.

இது தொடர்பில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர் ஊடாக பிராந்திய மருத்துவ அதிகாரி பணிமனைக்கும் தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவம் குறித்து சுற்றுச்சூழல் பொலிஸாரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையிலேயே இந்த விடயம் தொடர்பில் மாகாண சுகாதார அமைச்சு உடன் விளக்கமளிக்குமாறு பிரதம செயலாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல் கடிதத்தின் பிரதி, வடக்கு மாகாண ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More