Home இலங்கை நாவலர் வீதி புகையிரதக் கடவையில் நிசாந்தன் பலியானார்…

நாவலர் வீதி புகையிரதக் கடவையில் நிசாந்தன் பலியானார்…

by admin

யாழ்ப்பாணம் – நாவலர் வீதி புகையிரதக் கடவையின் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9.00 மணியளவில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் – நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான 31 வயதுடைய  நிசாந்தன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே விபத்தில் உயிரிழந்தார்.

காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தொடருந்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த உணவக உரிமையாளர் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More