Home இலங்கை கொத்மலை நீர்த்தேக்கத்தில் பெண்ணின் சடலம் மீட்பு

கொத்மலை நீர்த்தேக்கத்தில் பெண்ணின் சடலம் மீட்பு

by admin

க.கிஷாந்தன்)

பூண்டுலோயா காவல்துறைபிரிவுக்குட்பட்ட கொத்மலை நீர்த்தேக்கத்தில் இ ன்று   மதியம் பெண் ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்தனர். பொது மக்கள் வழங்கிய தகவலின் அடுத்தே இச்சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் மற்றும் பொது மக்களின் உதவியுடன் மீட்கப்பட்ட இச்சடலத்தை மரண விசாரணைகளின் பின் வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்தனர்.

பூண்டுலோயா – ஹதூனுவாவ, வட்டாந்தர பகுதியை சேர்ந்த 18 வயதுடைய  பெண் எனவும், 27.11.2019 அன்று காலை முதல் காணாமல் போய் இருந்ததாகவும், காவல்துறையியினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இ ன்று  மதியம்  பெண் சடலமாக மீட்கப்பட்டார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சானிக்கா மதுஷானி ஏக்கநாயக்க (வயது – 18) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இப்பெண் தற்கொலை செய்து கொண்டரா அல்லது கொலை செய்யப்பட்டு நீர் தேக்கத்தில் எறியப்பட்டுள்ளாரா என்பது தொடர்பாக  காவல்துறையினர் புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரைணைகளை பூண்டுலோயா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  #பூண்டுலோயா #பெண்#சடலம்

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More