Home இலங்கை அப்புத்தளை காகல்ல தோட்டத்தில்  வெள்ளம்  – மண்சரிவு அபாயம்  –  240 பேர் இடம்பெயர்வு

அப்புத்தளை காகல்ல தோட்டத்தில்  வெள்ளம்  – மண்சரிவு அபாயம்  –  240 பேர் இடம்பெயர்வு

by admin

(க.கிஷாந்தன்)

பதுளை மாவட்ட அப்புத்தளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் பெய்து வரும் மழையினால் காகல்ல தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 56 குடும்பங்களை சேர்ந்த 240 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். குறித்த 240 பேர் வெளியேற்றப்பட்டு, அப்புத்தளை  காகல்ல தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உலர் உணவு பொருட்கள் அப்புத்தளை பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.

அதேபோன்று, இந்த பகுதி மக்கள் கடந்த 10 வருட காலங்களாக மண்சரிவு அபாயத்திற்கு உள்ளாக்கியிருந்த போதிலும், மழை காலங்களில் மாத்திரம் முகாம்களுக்கு செல்வதும், பின்பு காலநிலை வழமைக்கு திரும்பிய பின் வீடுகளுக்கு செல்வதுமாகவே வழமையாக கொண்டு வந்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட தங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு பாதிக்கப்பட்ட இவர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

இடம்பெயர்ந்துள்ள இந்த மக்களை முன்னாள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் பார்வையிட்டதுடன், இவர்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களையும் வழங்கியுள்ளார்.   #அப்புத்தளை   #வெள்ளம்  #மண்சரிவு #அபாயம்  #இடம்பெயர்வு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More