Home இந்தியா நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட தயார் – அமித்ஷாவுக்கு ரத்த கடிதம் எழுதிய துப்பாக்கி சுடும் வீராங்கனை

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட தயார் – அமித்ஷாவுக்கு ரத்த கடிதம் எழுதிய துப்பாக்கி சுடும் வீராங்கனை

by admin

நிர்பயா பாலியல்வன்புணர்வுக்கு குற்றவாளிகளை தூக்கிலிட அனுமதிக்கவேண்டும் என சர்வதேச துப்பாக்கி சுடும் வீராங்கனை வர்திகா சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் கடந்த 2012 டிசம்பர் 16-ம் திகதி மருத்துவ மாணவி நிர்பயாவை 6 பேர் கொண்ட கும்பல் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்து பேருந்தில் இருந்து தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த நிர்பயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த குற்றத்தில் ஈடுபட்ட ராம்சிங், பவன்குப்தா, முகேஷ்சிங், வினய் சர்மா, அக்சய் தாக்கூர் மற்றும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் 6 பேரில் 5 குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

முக்கிய குற்றவாளியான ராம்சிங் டெல்லி திகார் சிறைக்குள் அடித்து கொல்லப்பட்டதுடன் சிறுவன் கடந்த 2015-ம் ஆண்டு தனது தண்டனை காலம் நிறைவடைந்ததையடுத்து விடுவிக்கப்பட்டார். மற்ற குற்றவாளிகளான பவன் குப்தா, முகேஷ் சிங், வினய் சர்மா, அக்ஷய் தாக்கூர் ஆகிய 4 பேருக்கும் உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

இதையடுத்து, டெல்லி நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகளை டெல்லி திகார் சிறைத்துறை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த குற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்க வேண்டும் என சர்வதேச துப்பாக்கி சுடும் வீராங்கனை வர்திகா சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை விடுத்து ரத்த கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், நிர்பயா பாலியல்வன்புணர்வு குற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தனது முயற்சிக்கு நடிகைகள், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ; ஆதரவளிக்க வேண்டும் எனவும் இதன்மூலம் சமுதாயத்தில் நாம் மாற்ற கொண்டுவர முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.  #நிர்பயா  #தூக்கிலிட  #அமித்ஷாவுக்கு  #வீராங்கனை #வர்திகாசிங்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More