Home இலங்கை மத்திய வங்கியின் தடயவியல் கணக்காய்வுகளை பகிரங்கப்படுத்துமாறு TISL கோரிக்கை…

மத்திய வங்கியின் தடயவியல் கணக்காய்வுகளை பகிரங்கப்படுத்துமாறு TISL கோரிக்கை…

by admin

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) தடயவியல் கணக்காய்வின் உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பகிரங்கப்படுத்துமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) சபாநாயகரை கோருகின்றது.

இந்த அறிக்கைகள் பொது நிறுவனங்களுக்கான தேர்வுக்குழுவால் (COPE) முன்வைக்கப்பட்டு நாடாளுமன்ற அமர்வுகளின்போது விவாதிக்கப்பட்டிருந்தன. எனினும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அறிக்கையை பகிரங்கப்படுத்துவதற்கு எதிராக சபாநாயகருக்கு சட்டமா அதிபரால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனை தொடர்பாக (TISL) கரிசணை கொண்டுள்ளது.

TISL இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒப்பேசேகர தெரிவிக்கையில், ´சட்டமா அதிபர் திணைக்களத்தின் வகிபாகமான அரச சட்டவாதியாக பொதுமக்கள் சார்பாகவும் மற்றும் அரசாங்கத்துக்கான சட்ட ஆலோசகராகவும் செயற்படும் இரட்டை பாத்திரத்தை வகிப்பதனூடாக ஏற்படும் முரண்பாட்டு நலன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் நிறுவன ரீதியான குறைபாடாகும்.

நல்லெண்ணம் கொண்ட சட்டமா அதிபர் திணைகள அதிகாரிகள் மட்டுமன்றி தடயவியல் கணக்காய்வு அறிக்கையை பகிரங்கமாக வெளியிடுவதற்கு தாமதிப்பதன் காரணமாக சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்தின் நலனிற்காகவாக அல்லது பொதுநலனுக்காகவா செயற்படுகின்றது எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்´.

நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு ரீதியான கடமையான பொதுநிதியை மேற்பார்வை செய்வதை முதன்மையான கடமையை செய்வதனுடாக தடயவியல் கணக்காய்வு அறிக்கைகளை வெளிப்படுத்துமாறு TISL சபாநாயகரிடம் கோருகின்றது.

ஓபேசேக்கர மேலும் தெரிவிகையில், நீண்டகாலமாக வெளிப்படுத்தப்படாமலிருந்த தடயவியல் கணக்காய்வுகள் பொது நிதியின் தவறான பிரயோகம் தொடர்பாக அறிவதற்கான மைல்கல்லாக அமையும் என்பதோடு 900 மில்லியன் வரிசெலுத்துவோரின் நிதியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கைகள் பொதுமக்களினதும் அவர்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கும் பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு, இதனால் பாதிக்கப்படுபவர்கள் பொதுமக்களே என்பதையும் நாம் நினைவிற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையினாலேயே தடயவியல் கணக்காய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றது, கணக்காய்வாளர் தலைமை அதிபதியினதும் சட்டமா அதிபரினதும் ஆலோசனையுடன் இறுதிப்படுத்தப்பட்ட விசாரணை நியதிகளுக்கமைவாக கீழே குறித்துரைக்கப்பட்ட குறித்து ஒதுக்கப்பட்ட ஐந்து பணிகளில் தடயவியல் கணக்காய்வுகள் கொண்டு நடாத்தப்பட்டன:

1. 2002 ஜனவரி 01 தொடக்கம் 2015 பெப்ரவரி 28 வரையான காலப்பகுதியின் போது பொதுப்படுகடன் திணைக்களத்தின் மூலம் திறைசேரி முறிகளை வழங்குதல்,

2. 2002 ஜனவரி 01 தொடக்கம் 2015 பெப்ரவரி 28 வரையான காலப்பகுதியின் போது வழங்கப்பட்ட / கொடுக்கல் வாங்கல் செய்யப்பட்ட திறைசேரி முறிகள் தொடர்புபடுகின்ற ஊழியர் சேம நிதியத்தின் முதலாந்தர மற்றும் இரண்டாந்தர சந்தைக் கொடுக்கல் வாங்கல்கள்,

3. 1998 ஜனவரி 01 தொடக்கம் 2017 டிசெம்பர் 31 வரை பட்டியலிடப்பட்ட அல்லது பட்டியலிடப்படாத பங்குரிமை மூலதனங்களில் ஊழியர் சேம நிதியத்தின் கொடுக்கல் வாங்கல்கள்,

4. 2015 பெப்ரவரி 01 தொடக்கம் 2016 மார்ச் 31 வரையான காலப்பகுதியின் போது பொதுப்படு கடன் திணைக்களத்தின் மூலமான திறைசேரி முறி வழங்கலும் கிடைக்கப் பெற்ற நிதியங்களை பொதுத் திறைசேரிக்கு பணவனுப்பல் செய்தலும்.

5. 2009 ஜனவரி 01 தொடக்கம் 2017 டிசெம்பர் 31 வரை தெரிவு செய்யப்பட்ட முதனிலை வணிகர்கள் தொடர்பில் பொதுப் படுகடன் கண்காணிப்பாளர் / வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களப் பணிப்பாளர் மூலமான மேற்பார்வை நடத்தையும் ஒழுங்குமுறைப்படுத்தல் வகிபாகமும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More