Home இலங்கை வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான வழக்கு – ஆவணங்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் :

வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான வழக்கு – ஆவணங்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் :

by admin


முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான வழக்குடன் தொடர்புடைய ஆவணங்களை முன்வைப்பதற்காக சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் இன்று அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பழிவாங்கும் நோக்கில் குற்றப்புலனாய்வு திணைக்களம் ஊடாக கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட அண்மையில் ஆணைக்குழுவிடம் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய சட்டமா அதிபர் திணைக்களத்திடம் உள்ள சகல ஆவணங்களையும் முன்வைக்குமாறு அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு உத்திரவிட்டிருந்தது. அதேவேளை முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட இன்றும் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இதுவரை சுமார் 782 முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில் ஆணைக்குழுவின் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் அடுத்த மாதம் 6 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடதக்கது.  #வசந்தகரன்னாகொட  #வழக்கு   #ஆவணங்கள்  #ஜனாதிபதிஆணைக்குழு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More